பாதாள உலககுழு உறுப்பினருக்கு தொலைபேசி கடத்திய 6 போ் கைது.

பூசா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாள உலககுழு முக்கியஸ்த்தா் கஞ்சிப்பான இம்ரானுக்கு உணவு பொதிக்குள் வைத்து 2 கைதொலைபேசிகளை கடத்திய 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இச்சம்வத்துடன் தொடர்பில் அவரது தந்தை மற்றும் சகோதரர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தமை குறிப்பிபடத்தக்கது.
இதேவேளை, கைத்தொலைபேசிகளின் சார்ஜர்களும் மீட்கப்பட்டுள்ளது. பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரான் என அழைக்கப்படும் மொஹம்மட் நஜீம்
மொஹம்மட் இம்ரானை இம்மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.