Mon. May 18th, 2026

பாணின் விலையில் அதிகரிப்பு இல்லை, விலை அதிகரிப்பு திரும்பபெறப்பட்டது

ஒரு றாத்தல் பாணின் விலை முன்பு அறிவித்தபடி ரூ. 2 ஆல் அதிகரிக்கப்படவில்லை என்று பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது .

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவித்தார்.

கோதுமை மாவின் விலையை ப்ரிமா சிலோன் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் அதிரிக்க இருப்பதாக வெள்ளிக்கிழமை (06) அறிவித்ததை தொடர்ந்து , பனின் விலையை ரூ .2.00 ஆல் அதிகரிப்பதாக சங்கம் அறிவித்தது இருந்தது

1 கிலோ கோதுமை மாவின் விலை ரூ .5.50 ஆக உயர்த்தப்பட்டது, இருப்பினும் கோதுமை மாவு நிறுவனங்கள் பின்னர் விலை உயர்வை திரும்பப் பெற்றன. இந்த நிலையிலேயே இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

About The Author

Share This:

Leave a Reply

You may have missed