Thu. Apr 18th, 2024

பருத்தித்துறை பொதுச் சந்தையில் ஐவருக்கு கோரோனோ

பருத்தித்துறை பொதுச் சந்தை மற்றும் அதனை அண்மித்த சந்தை மேற்கு பகுதியில் இன்று ஐவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் எழுமாற்றாக இன்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . அவர்களில் மூவர் சந்தை வியாபாரிகள் என்றும் இருவர் சந்தையை அண்டிய மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர் .
இதனையடுத்து, பருத்தித்துறை சந்தையை தற்காலிகமாக மூடுவதா அல்லது கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதிப்பதா என்பது தொடர்பில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆராய்ந்து வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்