பதனழிந்த ஐஸ்கிறீம் விற்பனை. பூட்சிற்றி முகாமையாளரிற்கு நீதி மன்றத்தால் 135,000 ரூபா தண்டம்

பதனழிந்த ஐஸ்கிறீம் விற்பனை. பூட்சிற்றி முகாமையாளரிற்கு நீதி மன்றத்தால் 135,000 ரூபா தண்டம் வழங்கப்பட்டது.
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் நிர்மலானந்தன் அவர்களின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும், பூட்சிற்றிகள், உணவகங்கள், தேநீர்சாலை என்பன தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் நல்லூர் பொது சுகாதார பரிசோதகர்
ம.அனுசூதனன் தலைமையிலான குழுவினரால் கடந்த 12.03.2025ம் திகதி பூட் சிற்றிகள் பரிசோதிக்கப்பட்டன.
இதன்போது கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள பூட்சிற்றியில், பழுதடைந்த குளிர்சாதன பெட்டியில் உரிய வெப்பநிலை பேணப்படாமல், பதனழிந்த ஐஸ்கிறீம்களை விற்பனைக்காக வெளிக்காட்டி வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது.

இதனையடுத்து பழுதடைந்த குளிர்சாதன பெட்டியுடன் பதனழிந்த ஐஸ்கிறீம்களை பொது சுகாதார பரிசோதகர் ம. அனுசூதனன் அவர்கள் கைப்பற்றினார்.
இன்றையதினம் 17.03.2025ம் திகதி பூட்சிற்றி முகாமையாளரிற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை இன்றையதினமே விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான், பூட்சிற்றி முகாமையாளரிற்கு எதிரான குற்றச்சாட்டுகளிற்கு முகாமையாரை குற்றவாளி என இனங்கண்ட நீதவான் முகாமையாளரிற்கு 135,000/= தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.