பட்டத் திருவிழா இடைநிறுத்தம்
வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
தைப் பொங்கல் தினத்தன்று வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் வருடம் தோறும் மிகப் பிரமாண்டமான பட்டத்திருவிழா கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இம்முறை ஏற்பாடு செய்யப்பட்ட பட்டத் திருவிழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷச கலந்து கொள்ளதாக இருந்தது. நேற்று வல்வெட்டித்துறை மக்களுக்கும் விழா ஏற்பாட்டாளர்களுக்கும் இடம்பெற்ற கலந்துரையாடலிலே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.