படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 35வது ஆண்டு நினைவு நாளில் வங்காலை புனித ஆனாள் பங்கில் இரத்ததான நிகழ்வு 06.01.2020 இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
குறித்த நிகழ்வினை வங்காலை பங்குத்தந்தை, உதவி பங்குத்தந்தை, மற்றும் ஆலய மேய்ப்பு பணி சபையினர், கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தினர், பங்கு சமூகம் இணைந்து ஏற்பாடு செய்தனர்.
இதன் போது மன்னார் பொது வைத்தியசாலையில் இருந்து வருகை தந்த வைத்தியர்கள், தாதியர்கள், பணியாளர்கள் இணைந்து மிகவும் சிறப்பான முறையிலே இரத்ததான நிகழ்வை நடாத்தி முடித்திருந்தார்கள்.