நெல்லியடியில் பச்சை குத்தும் வியாபார நிலையத்திற்கு சீல் வைப்பு

வடமராட்சி நெல்லியடி பகுதியில் இயங்கும் வியாபார நிலையம் ஒன்றிற்கு கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபையால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வியாபார நிலையம் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வகையில் காணப்பட்டமையை அடுத்தே நேற்று செவ்வாய்க்கிழமை கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபையால் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கரவெட்டி பிரதேச சபை செயலாளர் கணேசன் கம்ஸநாதன் அவர்களினால்
பகிரங்க அறிவித்தல்
“SAN TATOOS” (நெல்லியடி) எனும் வியாபாரநிலையத்தை மூடுதல் எனும் தலைப்பில்,
சுகாதாரத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் பச்சைகுத்தும் (TATTO) செயற்பாட்டில் ஈடுபட்டமை மற்றும் துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றமையினால் நபர் ஒருவர் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

எனவே இவ் வியாபார நிலையம் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் முன் அனுமதி இன்றி இக் கடையைத் திறத்தல், உள்நுழைதல், வியாபார செயற்பாடுகளில் ஈடுபடுதல் என்பன முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதனை இத்தால் பகிரங்கமாக அறியத்தருகின்றேன்.
இவ் அறிவித்தலை மீறினால் 1987ஆம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேசசபைகள் சட்டத்தின் பிரிவு 78,149 இற்கு அமைவாக பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றேன். என கையொப்பம் இடப்பட்ட அறிவித்தல் கடையின் முன் பக்கமாக ஒட்டப்பட்டுள்ளது.