நெல்லியடிப் பொலீஸாரின் அதிரடி நடவடிக்கை – ஒரு கிழமைக்குள் திருடர்கள் கைது
நெல்லியடிப் பொலீஸாரின் அதிரடி நடவடிக்கையால் வீதியால் சென்ற பெண்ணிடம் அபகரிக்கப்பட்ட நகை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் குறித்த களவுடன் தொடர்புடைய ஒருவரையும் தேடி வருகின்றனர்.
கடந்த 13ம் திகதி குஞ்சர்கடைப் பகுதியில் மோட்டார் சையிக்கிளில் சென்ற பெண்ணிடம் பின்தொடர்ந்து மோட்டார் சையிக்கிளில் வந்த இருவர் சங்கிலியை அபகரித்த சென்றுள்ளதாக நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் சாவகச்சேரி புலனாய்வுப் பிரிவினரால் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் நெல்லியடி பொலீஸ் பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீரவின் பணிப்பின் பேரில் உபபொலீஸ் பரிசோதகர் ரட்ணாயக்க தலைமையிலான குழுவினர் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு ஒரு கிழமைக்குள் சந்தேக நபரையும் குறித்த களவில் ஈடுபட்ட மோட்டார் சையிக்கிளையும் கைப்பற்றியுள்ளனர். அத்துடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், நகை அடகு வைக்கப்பட்டமையும் தெரிய வந்துள்ளது.