நிறுவுநர் பொன்.பரமானந்தர் அவர்களின் திருவுருவச்சிலை திறப்புவிழா

குரும்பசிட்டி பொன்.பரமானந்தர் மகா வித்தியாலய நிறுவுநர் பொன்.பரமானந்தர் அவர்களின்
திருவுருவச்சிலை திறப்புவிழா நாளை புதன்கிழமை காலை 8.30 மணிக்கு பாடசாலையில் நடைபெறவுள்ளது.

வித்தியாலய முதல்வர் க.வசந்தரூபன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக சிவபூமி அறக்கட்டளை தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன், சிறப்பு விருந்தினராக வலிகாமம் கல்வி வலய ஆரம்பக் கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி.முரளீதரன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.
பாடசாலையின் 125 ஆவது ஆண்டை நோக்கிய பயணத்தின் முக்கிய நிகழ்வாக இது அமைவது குறிப்பிடத்தக்கது.