நிந்தவூர் கமநல அலுவலகத்தில் கார்லிக்கின் அடாவடி , வெளியாகியுள்ள வீடியோ.
அண்மையில் நிந்தவூர் விவசாய திணைக்களத்தில் வைத்து முஸ்லீம் அதிகாரியான கார்லிக் என்பவரால் தமிழ் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் செவிப்பறை பாதிக்கப்படுமளவுக்கு தாக்குதல் நடத்தியிருந்தார். இந்த நிலையில் கார்லிக் என்பவர் நீந்தவூர் விவசாயத்திணைக்களத்தில் ஒரு தாதா போல் நடந்து வருவதாகவும், தனக்கு வேண்டப்படாதவர்களை தனது அடியாட்கள் கொண்டு இங்கு துன்புறுத்துவதாகவும் தகவல்கள் வெளியானதுடன் இது சம்பந்தமாக வீடியோ ஆதாரம் ஒன்றும் வெளியாகி பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் என்ன விதமான நடவடிக்கை எடுப்பார்கள் என்று மட்டக்களப்பு தமிழ் சமூகம் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள்.