நாளை யாழ்ப்பாணம் வருகிறாா் பிரதமா் ரணில், ஜனாதிபதி வராா்.

என்டபிறைசஸ் ஸ்ரீலங்கா தேசிய வேலை திட்டத்தின் கீழ் நடாத்தப்படும் 3 வது கண்காட்சியின் அங்குராா்ப்பண நிகழ்வுகளுக்காக பிரதமா் ரணில் நாளை யாழ்ப்பாணம் வரவுள்ளாா்.
இந்நிகழ்வில் பிரதமருடன் ஜனாதிபதியும் கலந்து கொள்வாா் என கூறப்பட்டபோதும், ஜனாதிபதி இந்நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டாா் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
எண்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியின் மூன்றாவது தேசிய நிகழ்வு நாளை 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் பங்குபற்றுகின்றனர்.
இந்த நிகழ்வின் ஆரம்பப் பணிகளுக்கு மட்டும் 6 கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது. இதேவேளை, யாழ். மாநகர சபையின் புதிய மாநகரக் கட்டடத்துக்கு
அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.