Wed. Apr 23rd, 2025

நாளை யாழ்ப்பாணம் வருகிறாா் பிரதமா் ரணில், ஜனாதிபதி வராா்.

என்டபிறைசஸ் ஸ்ரீலங்கா தேசிய வேலை திட்டத்தின் கீழ் நடாத்தப்படும் 3 வது கண்காட்சியின் அங்குராா்ப்பண நிகழ்வுகளுக்காக பிரதமா் ரணில் நாளை யாழ்ப்பாணம் வரவுள்ளாா்.

இந்நிகழ்வில் பிரதமருடன் ஜனாதிபதியும் கலந்து கொள்வாா் என கூறப்பட்டபோதும், ஜனாதிபதி இந்நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டாா் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

எண்­டர்­பிறைஸ் ஸ்ரீலங்கா கண்­காட்­சியின் மூன்­றா­வது தேசிய நிகழ்வு நாளை 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்­பாணம் முற்­ற­வெ­ளியில் நடை­பெ­ற­வுள்­ளது.

நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீர தலை­மையில் நடை­பெறும் இந்த நிகழ்வில்  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க ஆகியோர் பங்­கு­பற்­று­கின்­றனர்.

இந்த நிகழ்வின் ஆரம்பப் பணி­க­ளுக்கு மட்டும் 6 கோடி ரூபா நிதி செல­வி­டப்­பட்­டுள்­ளது எனக் கூறப்­பட்­டது. இதே­வேளை, யாழ். மாந­கர சபையின் புதிய மாந­கரக் கட்­ட­டத்­துக்கு

அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.இந்த நிகழ்வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்