Sat. May 24th, 2025

நாளைய தினமே அதிபர் ஆசிரியர்கள் சுகயீன லீவு போராட்டம்

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு நாளை செவ்வாய்க்கிழமை அதிபர் ஆசிரியர்கள் தமது சுகயீன லீவு போராட்டத்தில் ஈடுபடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் அறிவித்துள்ளார்.
அனைத்து அரச ஊழியர் தொழிற்சங்கங்களும் இன்று 8ம் திகதி  மற்றும் நாளை 9 ம் திகதி நடைபெறும் தொழிற்சங்க போராட்டத்துக்கு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பும் ஆதரவு தெரிவுக்கும் அதேவேளை,  இரண்டு நாட்களும் பாடசாலைகள் செயலிழப்பதைத் தவிர்க்கும் முகமாக,   9 ம் திகதி செவ்வாய்க்கிழமை – அனைத்து அரச ஊழியர்கள் தொழிற்சங்கங்களின் போராட்டத்துடன் இணைந்து – அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கும் கோரிக்கைகளையும் முன்வைத்து சுகயீன லீவை அறிவித்து அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
நாளைய தினம் 9ம் திகதி அதிபர், ஆசிரியர்கள் கடமைக்கு செல்லமாட்டார்கள் என்பதுடன்
பெற்றோர்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்