நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜனால் சனசமூகநிலையம் மற்றும் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு
கரணவாய் சித்தம்பாத்தி பகுதியில் உள்ள அம்பிகை சனசமுக நிலைய திறப்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. தலைவர் புஷ்பராஜா தலைமையில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கேயன் இராமநாதன் அவர்கள் கலந்து நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.
இதனோடு அமைந்த சிறுவர் பூங்காவும் இன்றய தினம் நாடாளுமன்ற உறுப்பினரால் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்

