நகுலேஸ்வரத்தில் ஐப்பசி வெள்ளி சிறப்பு ஆராதனை
ஐப்பசி வெள்ளிக்கிழமைகளில் ஆலயங்கள் பலவற்றிலும் விசேட பூஜைகள் இடம்பெறுவது வழமை.
வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேச்சரத்தில் ஐப்பசி இறுதி வெள்ளி தினமான நாளை மறுநாள் 14ம் திகதி ஆலயத்தில் இயம சங்கார உற்சவம் இடம்பெறவுள்ளது.
மாலை 3.30 மணியளவில் விசேட அபிசேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பூஜை இடம்பெற்று மாலை 4.30 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று 5.00 மணியளவில் இயமசங்கார உற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
