தொண்டைமானாறு பரீட்சை திட்டமிட்டபடி நடாத்த ஏற்பாடு
தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தினால் நாளைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான பரீட்சைகள் திட்டமிட்டவாறு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய தினம் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஆசிரியர்களை பாடசாலைக்கு செல்லாது கஸ்டத்தை வெளிப்படுத்துவோம் என கேட்டுள்ளது. இதனால் மாணவர்களிடையே பெரும் குழப்ப நிலை உருவாகியுள்ளது.
அந்த பரீட்சையை நடாத்துபவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, தற்போது அந்தந்த கோட்ட கல்வி பணிமனைக்கு வினாத்தாள் அனுப்பப்பட்டுள்ளது எனக் குறிபிட்டதுடன் குறித்த பரீட்சை கொழும்பு பகுதியிலும் மாணவர்களை அழைத்து நடந்த வண்ணமே உள்ளது. குறித்த மாணவ அணியினர் பல பரீட்சைகளை சந்திக்கவில்லை. இது மாணவர்களின் பெறுபேறுகளில் தாக்கம் செலுத்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.