தேவரையாளி இந்துக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றம்
வதிரி தேவரையாளி இந்துக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ச. செல்வானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் கமலாகரன் கெளரிஹாசன், ஆவரங்கால் நடராஜ ராமலிங்க வித்தியாலய ஆசிரியர் திருமதி. ஷர்மிளா கெளரிஹாசன் சிறப்பு விருந்தினராக வடமராட்சி கல்வி வலய வரலாறு பாட ஆசிரிய வளவாளர் மு. கண்ணகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.