தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் மிதுன்ராஜ் இரட்டை தங்கங்கள் வென்று சாதனை
தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த மிதுன்ராஜ் இரட்டை தங்கப் பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான 49வது தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் காலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.மிதுன்ராஜ் குண்டு போடுதல் போட்டியில் 15.40 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தையும், தட்டெறிதல் போட்டியில் 48.08 மீற்றர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.