தென்மராட்சியில் சமூகச் சீர்கேடு
தென்மராட்சி பகுதியில் சமூகச் சீர்கேட்டில் ஈடுபட்டவர்களை கொடிகாமம் பொலீஸார் கைது செய்துள்ளனர். தென்மராட்சி மிருசுவில் கரம்பகம் பகுதியில் உள்ள வீடொன்றில் ஈடுபட்ட சமூகச் சீர்கேட்டில் ஈடுபட்ட மூவரையே பொலீஸார் கைது செய்துள்ளனர். இதில் வெளிமாவட்டப் பெண்கள் மற்றும் ஆண் ஒருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்பகுதியில் தொடர்ந்து சமூகச் சீர்கேடு இடம் பெறுவதாக அப்பகுதி மக்களால் இரகசிய புலனாய்வு பிரிவினருக்கு தகவல் வழங்கியதையடுத்தே இவர்கள் கைது சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்துள்ளனர்.