திருகோணமலை அபயபுராவில் புத்தர் சிலைகள் உடைப்பு
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவில் உள்ள அபயபுர பிரதேசத்தில் நேற்று முன்தினம் (24) இரவு ஸ்ரீ அபயராமய விகாரையில் இரு புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக உப்புவெளி போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது
விகாரையிலுள்ள இரண்டு சிலைகளே இனந்தெரியாத நபர்களால் சிலைகளின் தலைப்பகுதிகள் சிதைக்கப்பட்டதுடன் சிலைகளும் கீழே தள்ளி விழுத்தப்படுள்ளன
விகாரையின் விகாராதிபதி நேற்று முன்தினம் இரவு ள பிரித் ஓதும் நிகழ்ச்சிக்கு வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து இந்த சம்பவத்தை நன்கு திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளனர்
இந்த சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தினர்.
இந்த சம்பவத்தை முல்லைத்தீவு சம்பவத்துடன் தொடர்பு படுத்துவதற்கான விஷமிகள் யாரும் இதை செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது
