திருகோணமலையில் நீர்காகம் கூட்டுப்படை பயிற்சி!!

திருகோணமலை அஸ்ரப் துறைமுகத்தில் நீர்காகம் கூட்டுப்படை பயிற்சியின் முதல் கட்டமான மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்றது.
7 பெண், 15 ஆண் பயணக் கைதிகளை மீட்கும் பணிகள் இராணுவம் கடற்படையினரது கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டன.
விமானப் படையின் ஹெலிகொப்டர்களை பயண்படுத்தி இராணுவ கொமாண்டோ, விஷேட படையணி, இராணுவ புலனாய்வு படையணி மற்றும் கடற்படை விஷேட கடற்படைப் பிரிவினர்கள் இணைந்து இந்த மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.