தவறான முடிவால் உயிழந்த சிறுமிக்கும் தொற்று
தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட 11 வயதுச் சிறுமி கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென்மராட்சியின் எழுதுமட்டுவாழ் கரம்பகம் பகுதியினைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
தாயார் தண்டித்ததாலேயே தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கரம்பகம் பகுதியில் தாயாருடன் தனித்து வாழ்ந்த 11 வயதுச் சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.