தந்தையும் மகளும் தேசிய மட்ட நடுவர் பணியில் பலரும் பாராட்டு
தந்தையும், மகளும் தேசிய மட்ட போட்டியில் ஒரே நேரத்தில் கடமையாற்றியமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பளுதூக்கல் போட்டி பொலநறுவை றோயல் கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் கடந்த 12ம் திகதி முதல் 14ம் திகதி வரை நடைபெற்றது.
குறித்த போட்டிக்கு யாழ் பளுதூக்கும் கழகத்தின் தலைவர் விஜயபாஸ்கர் அவர்களும், அவரின் மகளான ஆசிய வீராங்கனை ஆர்ஷிகா அவர்களும் ர்இணைந்து குறித்த தேசிய மட்ட போட்டியில் நடுவர் பணியில் ஈடுபட்டமை பலரது கவனத்தை ஈர்த்ததோடு பலரும் தமது வாழ்த்துரைகளை தெரிவித்து வருகின்றனர்.