ஜெனிவாவில் இலங்கையின் பதிலை பொறுத்தே அடுத்த கட்ட தீர்மானம்!! -கூறுகிறார் சுமந்திரன்-
இலங்கை அரசு போர் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை செய்வதான ஏற்றுவிட்டு இப்போது அதிலிருந்து விலகி நிற்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-
ஜ.நா மனித உரிமை பேரவையில் இம்முறையும் இலங்கை குறித்த விவகாரங்கள் தொடர்பில் பேசப்படும்.
இதன் போது இலங்கை அரசாங்கம் என்ன பதில் சொல்லப்போகின்றார்கள் என்பதை கொண்டே அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றார்.