Fri. Jan 17th, 2025

சர்வதேச மனக் கணிதப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந் சாதனை

2023ம் ஆண்டின்  மலேசியா சர்வதேச மனக் கணிதப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந் சாதனை படைத்துள்ளார்.
80 இற்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபற்றிய சர்வதேச மனக் கணிதப் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வி.ருஷாந் முதல் இடத்தை பிடித்து எம் நாட்டிற்கும் எம் மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் இயங்கும் UCMAS கிளையில் பயிலும்
இவர் இலங்கை சார்பில் கலந்து கொண்டு முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச மனக் கணித போட்டி கடந்த 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் இடம்பெற்றது. இப் போட்டியில் உலகளாவிய ரீதியிலே 80 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2500 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். இலங்கையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 62 மாணவர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
இவருடன்  கிருபாகரன் தர்சானந், செந்தில்நாதன் சேசாளன், கஜேந்திரன் லவின், வானதி சிவநேசன் ஆகிய மாணவர்கள் சர்வதேச ரீதியாக மூன்றாம் இடத்தினையும் தனதாக்கிக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்