சட்டவிரோதமாக மதுபானம் விற்ற ஒருவர் மருதங்கேணி பொலிசாரால் கைது
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் விடுமுறை தினமான நேற்று முன்தினம் திங்கட்கிழமை சட்டவிரோதமாக மதுபானம் விற்ற ஒருவர் மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுமுறை தினத்தில் மதுபானம் விற்க அனுமதி இல்லாத போதும் மருதங்கேணி பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையில் மிகவும் இரகசியமான முறையில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை இடம்பெற்றுள்ளது.
மருதங்கேணி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் பொறுப்பதிகாரி கெலும் பண்டார தலைமையிலான குழுவினர் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற ஒருவரை மதுபான போத்தலுகளுடன் கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்செய்ய உள்ளனர். (422