சஜித்தின் மேசடி தொடர்பில் விசாரணைக்குழு!! -நாமல் ராஜபக்ஷ அதிரடி அறிவிப்பு-
நாட்டில் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் உறுதிப்படுத்துவதே எமது நோக்கம் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபஷ தெரிவித்தார்.
அரசியல் பழிவாங்கலை செய்ய வேண்டிய அவசியம் எமக்கு இல்லை என்றும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை நடந்த பாராளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.
சஜித் பிரேமதாசவின் மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் எந்தவித அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. அவரது சொந்த மாவட்டத்திலேயே அபிவிருத்தி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் மோசடிகள் இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றார்.