கோர விபத்தில் இளம் குடும்பம் பலி
சூரியவெவ பதலங்கல வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர்கள் பலியாகியுள்ளனர். கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ளனர்.அவர்கள் சூரியவெவவை நோக்கி மோட்டார் சைக்கிளில் அதிக வேகமாக பயணித்த போது, மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மரம் ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் கணவன் மனைவியாகிய 18 வயதான யுவதியும், அவரது 21 வயதான இருவருமே உயிரிழந்துள்ளனர்