கொழும்பு கல்கிஸ்ஸவில் இடம்பெற்ற மொத சம்பவம், ஒருவர் கொலை மற்றவர் படுகாயம்

கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள சில்வெஸ்டர் வீதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் பாரிய மோதல் சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தின் பொழுது ஒருவர் உயிர் இழந்துள்ளதுடன் மற்றவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டதாலேயே கொலை நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்கள். சம்பவத்தின் உயிரிழந்தவர் 34 வயது மதிக்கத்தக்க நபர் என்றும் காயமடைந்த மற்றைய நபர் கொலோம்போ களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார் என்று போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விசரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்