கொழும்பில் 6 குழந்தைகளை பிரவித்த பெண்
இலங்கையில் ஒரே தடவையில் 6 குழந்தைகள் பிரசவிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
31 வயதான பெண் ஒருவருக்கு இன்று காலை ஒரே நேரத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் 3 ஆண் குழந்தைகளும் , 3 பெண்குழந்தைகளும் பிறந்துள்ளன. இது கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் பதிவாகியுள்ளது. தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஒரே நேரத்தில் 6 குழந்தைகள் பிறந்த சம்பவம் இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.