Thu. Mar 28th, 2024

கருத்தரங்கிற்காக சென்ற மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். பலரும் விசனம்

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கருத்தரங்கிற்காக சென்ற மாணவர்களும் ஆசிரியர்களும் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

வடமாகாண கல்வி அபிவிருத்தி ஆலோசனை அமையத்தினால் கல்வி பொதுத் தர சாதாரண பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கான கருத்தரங்கு இன்றும், நாளையும், நாளை மறுதினமும் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் மாணவர்களின் எண்ணிகையை கருத்தில் கொள்ளாது ஏற்பாட்டாளர்களினால் அழைக்கப்பட்டதனால் பல பாடசாலை மாணவர்கள் மற்றும் பொறுப்பான ஆசிரியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இலவசக் கருத்தரங்கிற்காக அழைக்கப்பட்ட போது பல தூர இடத்தில் உள்ள மாணவர்களை போக்குவரத்து இடையூறுகளையும் கருத்தில் கொள்ளாது மாணவர்களுக்கான கையேடுகள் மாத்திரம் வழங்கப்பட்டு கருத்தரங்கு நடத்தாது பல மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இது தொடர்பாக ஏற்பாட்டாளர்கள் அடுத்து வரும் இரு நாட்களிலாவது ஒழுங்குமுறையை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட பாடசாலை அதிபர் மற்றும் மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்