கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொவிட் 19 தடுப்பூசி ஏற்றும் பணிகள் எதிர்வரும் வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளதாக கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை உடுப்பிட்டி, கரணவாய், இமையாணன் பகுதியைச் சேர்ந்த ஜே/352 தொடக்கம் ஜே/361 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்டோருக்கு உடுப்பிட்டி ஆரம்ப சுகாதார பணிமனையிலும், வெள்ளிக்கிழமை அல்வாய், துன்னாலை, கரவெட்டி கிராம அலுவலகர் பகுதியைச் சேர்ந்தோருக்கு கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும், ஜெ/348 தொடக்கம் ஜெ/351 வரையான கிராம அலுவலகர் பிரிவிற்குட்பட்டோருக்கு சோழங்கன் ஆரம்ப சுகாதார பணிமனையிலும் நடைபெறவுள்ளது. 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான விழிப்புணர்வை கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம அலுவலகர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், இணைக்கப்பட்ட பட்டதாரி பயிலுநர்கள் ஆகியோர் மேற்கொள்ளவுள்ளதுடன் தடுப்பூசி ஏற்ற விருப்பம் இருந்தும் எழுந்து நடமாட முடியாதோர் இருப்பின், சுகாதார பணிமனைக்கு அறிவிக்குமிடத்து நேரடியாகவே வந்து தடுப்பூசி போடவும் உள்ளனர். அத்துடன் 20 வயதிற்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகள் திங்கட்கிழமையும், வெள்ளிக்கிழமையும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.