Sat. Apr 20th, 2024

கன்ரர் தடம்புரண்டதில் 8 பேர் காயம்

கன்ரர் வாகனத்தில் சவுக்கு மரம் வெட்டச் சென்ற இளைஞர்கள், கன்ரர் வாகனம் தடம்புரண்டதில் 8 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி துன்னாலை பகுதியில் அமைந்துள்ள கலிகை கந்தன் ஆலய 5ம் நாள் திருவிழா பூசைக்காக மணற்காடு பகுதியில் அனுமதியற்ற சவுக்கு மரம் வெட்டுவதற்காக அப்பகுதி இளைஞர்கள் சிலர் சென்றுள்ளனர். சவுக்கு மரம் வெட்டி திரும்பி வந்து கொண்டிருந்த போது கன்ரர் வாகனம் தடம் புரண்டதில் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்