Thu. Apr 18th, 2024

எல்லேயில் நெல்லியடி ம.கல்லூரி நெருப்பாட்டம் சம்பியன் கிண்ணத்தை வசமாக்கியது

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆண்களுக்கான எல்லே போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

இதன் இறுதியாட்டம் நேற்று யாழ் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து மன்னார் சென் ஆன்ஸ் மகா வித்தியாலய அணி மோதியது.
முதலில் துடுபெடுத்தாடிய சென் ஆன்ஸ் மகா வித்தியாலய அணி நிர்ணயிக்கப்பட்ட 40 பந்துகளில் 8 ஓட்டங்களைப் பெற்றனர். 9 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இமாலய இலக்கை எதிர்கொண்டு நெல்லியடி மத்திய கல்லூரி அணி களம் இறங்கியது. ஆனால் நெல்லியடி மத்திய கல்லூரி வீரர்கள் முதல் 5 பந்துகளிலேயே 5 ஓட்டங்களை பெற்று சென் ஆன்ஸ் மகா வித்தியாலய அணியினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். இவ்வாறு நெல்லியடி மத்திய கல்லூரி அணியினரின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்த முடியால் சென் ஆன்ஸ் மகா வித்தியாலய அணி வீரர்கள் திணறினர். இதனால் 27 பந்துகளில் 9 ஓட்டங்களைப் பெற்று நெல்லியடி மத்திய கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்