எலிக்காய்ச்சலுக்கு எதிரான முற்தடுப்பு மருந்து கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
எலிக்காய்ச்சலுக்கு எதிரான முற்தடுப்பு மருந்து கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான எலிக்காய்ச்சலுக்கான முற்தடுப்பு மருந்தானது கிராம மட்ட உத்தியோகத்தர்கள்,
கள உத்தியோகத்தர்கள் , வதிவிடங்களில் வயல் தண்ணீர் பாதிப்புள்ளோர்களுக்கும் கரவெட்டி பொது சுகாதார பரிசோதகர் மூலம் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

கரவெட்டி பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகரினால் பொது மக்களுக்கான அறிவித்தலும் வழங்கப்பட்டுள்ளது.

வயல்களில் வேலை செய்யும் விவசாயிகள், சேற்று நிலங்களில் பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுபவர்கள் அல்லது வயல் வெளிகளில் செங்கல் தயாரித்தல் அல்லது மணல் அள்ளுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், இரத்தினக்கல் சுரங்கத் தொழிலாளர்கள், சேற்று நிலம் அல்லது நீர் தேங்கிய இடங்களில் விளையாட்டு மற்றும் ஏனைய செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் எலிக்காய்ச்சல் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மருந்துகளை சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகரின் ஆலோசனையுடன் எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்துகளை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
