Sat. May 16th, 2026

என்னால் சட்டத்தை உருவாக்கவும் முடியும் மீறவும் முடியும் , முன்னாள் லஞ்ச ஒழிப்பு ஆணையாளர் தில்ருக்க்ஷி

அவந்த்-கார்ட் தலைவர் நிசங்கா சேனாதிபதி மற்றும் லஞ்சம் ஆணைகுழுவின் முன்னாள் தலைவர் சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையேயான ஒரு தொலைபேசி உரையாடல் சமூக ஊடகங்களில் வெளிவந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தனது முகநூல் கணக்கை எடுத்துக் கொண்டு, தற்போது சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் சேனாதிபதி, தனது முகநூல் பக்கத்தில் இந்த தொலைபேசி உரையாடலின் ஆடியோ கிளிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த உரையாடலில் , முன்னாள் லஞ்ச ஒழிப்பு ஆணைகுழு தலைவர் தன்னால் சட்டத்தை மீறவும் சட்டத்தை உருவாக்கவும்தெரியும் என்று கூறுவது பதியப்பட்டுள்ளது .மேலும் அவந்த்-கார்ட் வழக்கை தாக்கல் செய்தது குறித்து தனது வருத்தத்தையும் தெரிவித்திருந்தார், மேலும் , நாட்டின் ஒழுங்கற்ற அரசியலைக் குற்றம் சாட்டி அவர் பேசியதும் தெளிவாக அந்த உரையாடலில் பதிவாகியுள்ளது. இந்த உரையாடல் ஆனது அரசியலில் பலத்த அதிர்வலைகளை தற்பொழுது ஏற்படுத்தியுள்ளது

இந்த நிலையில் கோத்தபாய ராஜபக்ச உட்பட அனைவரும் இந்த வழக்கில் இருந்து உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது

About The Author

Share This:

Leave a Reply

You may have missed