உலக வலுதூக்கல் போட்டியில் யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய மாணவி இரட்டை தங்கப் பதக்கங்களை கைப்பற்றி புதிய சாதனை
உலக வலுதூக்கல் போட்டியில் யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய மாணவி இரட்டை தங்கப் பதக்கங்களை கைப்பற்றி புதிய சாதனையை பதிவு செய்துள்ளார்.
உலக வலுதூக்கல் போட்டி தாய்லாந்தில் கடந்த 17ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இதில் 23 வயதிற்கு உட்பட்ட இளையோருக்கான வலுதூக்கல் போட்டியில் யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ச.புளோஸ்ரா 65 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு இரண்டு தங்கப்பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். வடமாகாணத்தில் உலக வலுதூக்கல் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களை கைப்பற்றியமை இதுவே முதல் தடவையாகும்.