உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரிக்க சுஜாதீன ஆணைக்குழுவை எனது ஆட்சியில் நியமிப்பேன் -கோத்தபாய

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரிக்க சுஜாதீன ஆணைக்குழுவை எனது ஆட்சியில் நியமிப்பேன் என்று பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.
கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்களின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த அறிக்கையை அவர் வெளியிட்டார். எனது ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரிக்க சுயாதீன அணைக்குழுவை நிறுவுவதுடன் தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் இல்லாத ஒரு நாடாக இலங்கையை உருவாக்குவோம் என்று குறிப்பிட்டார்.
இந்த தாக்குதலின் பாதிப்பை உணர்வதாகவும் , உடனடியாக ஒரு சுயாதீன ஆணைக்குழுவை நியமிக்குமாறு தற்போதைய அரசாங்கத்துக்கு வேண்டுகோளும் அந்த அறிக்கையில் விடப்பட்டது