உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் சிறப்புற நடைபெற்ற மாணவர் பாராளுமன்றம்

யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற நிகழ்வு கடந்த திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வரும் மாணவர் பாராளுமன்ற செயலாளர் நாயகமும் ஆகிய செல்வி. இராஜ்யலட்சுமி சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமராட்சி கல்வி வலய சமூக விஞ்ஞான ஆசிரிய வளவாளர் அருளம்பலம் பாலச்சந்திரமூர்த்தி கலந்து கொண்டார்.
