Sat. May 16th, 2026

இலங்கை வருபவர்களுக்கு தற்பொழுதும் விசா தேவை -குடிவரவு கட்டுபாட்டாளர்

இலங்கைக்குள் நுழைய 48 நாடுகளில் இருந்து வருபவர்கள் தற்பொழுதும் விசாவுக்கு விண்ணப்பிக்கவேண்டும். இவர்கள் இதனை இலங்கை வந்திறங்கு முன்னர் பெறவேண்டும். ஆனால் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக கட்டணம் அறவிடுவது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று இலங்கையின் குடிவரவு மற்றும் குடிவரவு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் பசன் ரத்நாயக் கொழும்பில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றினார்.

இந்த விலக்கு கட்டணதுக்கு மட்டுமே. சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு முன்பே விசா வைத்திருப்பது தற்பொழுதும் அவசியம், என்று அவர் கூறினார்

“இலங்கைக்கு வர விரும்பும் சுற்றுலாப் பயணிகள் www.eta.gov.lk என்ற இணையத்தில் உள்நுழைந்து விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும். குடிவரவு அதிகாரிகள் பின்னர் தடைசெய்யப்பட்ட மற்றும் பிற நடைமுறைகளுக்கான பாஸ்போர்ட்களை மற்றும் விண்ணப்பத்தை சரிபார்த்து பின்னர் விசாவை வழங்குவார்கள் என்று ரத்நாயக் மேலும் கூறினார்

About The Author

Share This:

Leave a Reply

You may have missed