Thu. Mar 28th, 2024

இலங்கை கால்பந்தாட்ட பெண்கள் தேசிய அணிக்கான தெரிவு

பெண்களுக்கான தெற்காசிய நாடுகளுக்கிடையிலான  காற்பந்தாட்டப் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி தொடக்கம் 14ம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்கான இலங்கை தேசிய அணிக்கான முதற்கட்டத் தேர்வு நாளை மறுதினம் சனிக்கிழமை அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி நிலையத்தில் காலை 8.30 மணிக்கு   நடைபெறவுள்ளது.
இதில் 18 வயதிற்குட்பட்ட (2004/2005/2006) பிறந்த வீராங்கனைகள் அனைவரும் உரிய ஆயத்தங்களுடன் தவறாது கலந்து கொள்ளுமாறு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ம.பேர்ட்டி பனிஸ்டர் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்