இலங்கையை சேர்ந்த பெண், ”மிஸ் இத்தாலியா ” இறுதி போட்டியில்

இத்தாலியில் வசிக்கும் இலங்கை தம்பதியினரின் 20 வயதான மகள் செவ்மி தாருகா பெர்னாண்டோ, இன்று இரவு நடைபெறவிருக்கும் “மிஸ் இத்தாலியா” இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவர்கள் சுமார் 30 ஆண்டுகளாக இத்தாலியில் வாழ்ந்து வருகிறார்கள்
படுவா என்ற நகரில் பிறந்த தாரூகா அழகு கலாச்சாரம் என்ற கற்கையில் டிப்ளோமா பெற்றவர் மற்றும் ஒரு மாடல் ஆகவும் பணியாற்றுகிறார்.
ஏற்கனவே வெனெட்டோ மாகாணமட்டத்தில் இடம்பெற்ற போட்டியில் அழகு ராணியாக முடிசூட்டப்பட்டு இருந்தார். பின்னர் பிராந்திய போட்டிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 187 போட்டியாளர்களில் ஒருவராக இத்தாலி பூராகவும் இடம்பெற்ற போட்டியில் பங்குபார்ட்டிய அவர் இன்றிரவு நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கான 80 போட்டியாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .
தாரூகா நிறம் தொடர்பாக சில இத்தாலியர்களின் இனவெறி தாக்குதல்களை தைரியமாக எதிர்கொண்டிருந்ததாகவும் , இந்த போட்டியில் பங்குபற்றுவதே இனவெறிக்கு எதிராக தைரியமாக