Sat. May 24th, 2025

இறுதி நிமிடம் வரை திக் திக் ஆட்டம், பரபரப்பான ஆட்டத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணி மகுடம் சூட்டியது

இறுதி நிமிடம் வரை திக் திக் ஆட்டம், பரபரப்பான ஆட்டத்தில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணி மகுடம் சூட்டியது

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான மாவட்ட மட்ட வலைப்பந்தாட்ட போட்டியில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணி பலத்த போராட்டத்தில் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான மாவட்ட மட்ட வலைப்பந்தாட்ட போட்டி சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் நடப்பாண்டு சம்பியனான சங்கானை பிரதேச செயலக அணியை எதிர்த்து சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணி மோதியது.
நான்கு கால் பகுதிகளாக நடைபெற்ற ஆட்டத்தில் ஒவ்வொரு கால் பகுதி ஆட்டத்திலும் சங்கானை பிரதேச செயலக அணி புள்ளிகளை பெற்ற போதிலும், இறுதிவரை சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணி போராடி தமது புள்ளிகளை உயர்த்தினர். இதனால் ஆட்டம் விறுவிறுப்பின் உச்சக்கட்டத்தை எட்டியது. நான்கு கால் பகுதி ஆட்டங்களின் நிறைவில் இரு அணிகளும் 26:26 என்ற புள்ளிகளில் சமநிலை வகித்தனர். இதனால் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க மேலதிக நேரம் வழங்கப்பட்டது.
இதிலும் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இரு அணிகளின் புள்ளிகளின் எண்ணிக்கையும் சம அளவில் அதிகரித்தது. இருப்பினும் ஆட்ட நேர முடிவில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணி 36:35 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்