Mon. Aug 10th, 2026

இறுதியில் வெளியேறும் சேரன் , கண்ணீரில் லொஸ்லியா, சோகத்தில் ரசிகர்கள்.,

இறுதியில் இன்று பிக் பாஸ்ஸின் 3 ஆவது ப்ரோமோ மூலம் சேரன் வெளியாவது உறுதியாகியுள்ளது. கடந்த நாட்களில் வெளிவந்த வதந்திகளுக்கு இது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடந்த 2 நாட்கள் மட்டும் புள்ளிப்பட்டியலில் கடைசியில் இருந்த ஷெரின் , வனிதாவினுடான சண்டைக்கு பின்னர் மக்களின் அனுதாபம் பெற்றதால் முன்னிலை பெற்றார். இந்த நிலையில் சேரன் கடைசி நிலைக்கு நேற்று முதல் தள்ளப்படிருந்தார்.


இந்த நிலையில் இன்று வெளியிட்ட 3 ஆவது ப்ரோமோ மூலம் சேரன் வெளியேறுவது உறுதியாகியுள்ளது. கமல் சார்,சேரன் என்று எழுதிய கார்ட்டை வைத்து வெளியில் வாருங்கள் பேசலாம் என்று அழைப்பதாக அந்த ப்ரோமோ உள்ளது. இதில் லொஸ்லியா சேரனின் கையை பிடித்து , இது நியாயம் இல்லை , உண்மையில் நான்தான் வெளியே போகவேண்டும் என்று அழுவதாக உள்ளது அந்த ப்ரோமோ.
இருந்த போதிலும் சேரன் வெளியே போவாரா அல்லது இரகசிய அறையில் தங்க வைக்கப்படுவாரா என்பது இன்று இரவு பிக் பாஸ் நிகழ்ச்சி காட்டப்படும்வரை புதிராகவே இருக்கும்..

About The Author

Share This:

Leave a Reply

You may have missed