இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கே எரிபொருள்
இன்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகம் நடைபெறவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி ஜூலை 10ம் திகதி வரை அத்தியாவசிய சேவைகளான சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் ஏற்றுமதி துறைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரச அலுவலக கடமைகளை வீட்டில் இருந்தே செய்வதற்கு அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் நகர்புற பாடசாலைகள் 10ம் திகதி வரை மூடப்படுவதோடு கிராமிய பாடசாலைகள் தொடர்ந்தும் இயங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.