ஆண்டாள் கிருஷ்ணரை வேண்டி பூஜை செய்த திருப்பாவை இறுதிநாளான இன்று கரையொதுங்கிய து.

ஆண்டாள் கிருஷ்ணரை வேண்டி பூஜை செய்த திருப்பாவை இறுதிநாளான இன்று வத்திராயன் கடற்கரையில் கண்ணன் ராதையின் சிலை கரையொதுங்கியுள்ளது.
13 /01/2025 இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை ஆகிய இருவரும் இணைந்த சிலை ஒன்று வத்திராயன் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது
அண்மைக்காலமாக காலநிலையில் ஏற்பட்ட மாற்றங்களினால் கடல் சீற்றங்கள் சூறாவளி புயல்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் ஏற்பட்டது. அதன்போது இந்தோனேசியா அல்லது மலேசியா, இந் தியா போன்ற நாடுகளில் இருந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த சிலையை பார்வையிடுவதற்காக அதிகளவான மக்கள் குவிந்துள்ளனர்.