Tue. Apr 16th, 2024

அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் மாலை நேர வகுப்புக்கள்

நாம் செய்வோம் அமைப்பின் அனுசரணையில் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தினர் இணைந்து மாலை நேர வகுப்புக்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் அல்வாய் வடக்கு மகாத்மா கிராமத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக அரசியல் ஆய்வாளரும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குநருமான சி.அ.ஜோதிலிங்கம், மருத்துவர் கதிரேசு பவணந்தி, லைவ் பவுண்டேசன் நிறுவுநர் அல்பேட் பெஸ்ரியன், யோகா மற்றும் கராத்தே ஆசிரியர் பே.வில்வம், அல்வாய் வடக்கு கிராம அலுவலர் திரு அரவிந்தராம்,  பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு சங்கீதன், சமூக விஞ்ஞான ஆய்வு மைய செயற்பாட்டாளர் திரு கமலகாந்தன், வடமராட்சி வலய முன்பள்ளி கல்வி பணிப்பாளர்  சத்தியசீலன், மாலை நேர கல்வித்திட்ட இணைப்பாளர் திருமதி கோபனா உட்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கினர்.
குறித்த கல்வித் திட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாலை நேர கல்வி கற்க முடியாத மாணவர்களுக்கான சுய கற்றலை  ஊக்குவிக்கும் நோக்குடன் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இம் மாலை நேர கல்வித் திட்டத்தில் தற்போது தரம் ஒன்று முதல் ஐந்து வரை  40 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும். இம்  மாலை நேர கல்வித்திட்டம் பிற்பகல் 4:00 மணி முதல் ஆறு மணிவரை ஞாயிறு தவிர்ந்த நாட்களில் இடம் பெறும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதே வேளை இக் கிராமத்தில் உள்ள  மகாத்மா முன்பள்ளிக்கு லைவ் பவுண்டேஷன் நிறுவுனர் அல்பேட் பெஸ்ரியன் தனது சகோதரியின் பிறந்த தினமான நேற்று சமார் 40 ஆயிரம் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்