அரியாலையில் வெடிபொருட்கள் மீட்பு!!
யாழ்ப்பாணம் அரியாலை – அருளம்பலம் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றை துப்புரவு செய்து கொண்டிருந்தபோது அங்கிருந்து வெடிக்காத நிலையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை காலை இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது கிரனைட் மற்றும் இரண்டு மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மேலும் சில வெடிபொருட்கள்
இருக்கலாம் என்ற அச்சம் காரணமாக துப்பரவு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் இதுதொடர்பாக நீதிமன்றத்தின்
கவனத்திற்கு கொண்டு செல்வதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.