Thu. Apr 25th, 2024

அதிபருக்கு கொரோனா பலர் தனிமைப்படுத்தும் நிலையில்

சிறுப்பிட்டி பாடசாலை அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிபர் கூட்டத்தில் கலந்து கொண்டமையால் கூட்டத்தில் கலந்து கொண்ட  அதிபர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
யாழ். கல்வி வலயத்திற்கு உட்பட்ட  சிறுப்பிட்டி பிரதேசத்திலுள்ள ஆரம்ப பிரிவு பாடசாலை அதிபர் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலை அதிபருடன் தொடர்பில் இருந்த சுமார் 100 கணக்கானோர் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
குறித்த அதிபர் கடந்த 14.07.2021ம் திகதி யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் நடைபெற்ற அதிபர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும்  அதில் 50பேர் பங்குபற்றியதாகவும் சொல்லப்படுகின்றது.
இதைவிட குறித்த அதிபர் தான் கடமையாற்றும் பாடசாலையில் வகுப்புகளை நடாத்தியுள்ளதோடு பெற்றோர் கலந்துரையாடலையும் நடாத்தியுள்ளார். அதுமட்டுமன்றி  மட்டுமன்றி உரும்பிராயில் நடைபெற்ற பூப்புனித நீராட்டுவிழா ஒன்றிலும் கலந்துகொண்டுள்ளார்.
இவருடன் தொடர்பில் இருந்த அல்லது இவரோடு நிகழ்வுகளில் பங்கேற்ற பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு இவரது வீட்டாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவருடன் திணைக்களத்தில் கூட்டத்தில் பங்குபற்றிய அதிபர்கள் கல்வி அதிகாரிகள் இதுவரையில் தனிமைப்படுத்தப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்